Show all

கனியுமா விஜய்க்கு! இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராகும் வாய்ப்பு

தற்போது வெளிவந்த தகவல்படி விஜய் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கப்போவதாகவும் அதற்காக அவர் 100 கோடி மற்றும் சரக்குசேவை வரியான 18 கோடி இணைத்து சம்பளமாக வாங்கப் போவாதாவாகும் செய்தி வெளியாகி உள்ளது.

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்த் திரையுலகில் வசூல் மன்னராக வலம்வந்து கொண்டிருக்கிறார் தளபதி விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இவருடைய அண்மைப் படமான ‘பிகில்’ வசூல் அடிப்படையில், நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூல் ஆனதை அடுத்து, தன்னுடைய அடுத்த படத்தைத் தன் நெருங்கிய நண்பரான சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

தற்போது வெளிவந்த தகவல்படி விஜய் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கப்போவதாகவும் அதற்காக அவர் 100 கோடி மற்றும் சரக்குசேவை வரியான 18 கோடி இணைத்து சம்பளமாக வாங்கப் போவாதாவாகும் செய்தி வெளியாகி உள்ளது. புகழ்மிக்க நார்த் இந்தியா கார்பொரேஷன் இவ்வாறு விஜய்யை அணுகியுள்ளதாகத் தகவல்.

விஜய் இதற்கு ஒப்புதல் தெரிவித்து விட்டால், இந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் தான் என்று உறுதியாகிவிடும். இந்த படத்தை தமிழ் நாட்டில் விற்க 140 கோடி தரப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இந்த செய்தியால் வடக்கத்திய திரையுலகே வியப்பில் ஆழ்ந்துள்ளது. விஜய் ரசிகர்கள், விஜயின் ஒப்புதலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். நாமும்கூட எதிர்நோக்கி வாழ்த்துவோமே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,396.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.