08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தெலுங்கு திரையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் வெற்றி தந்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. விஜய் தேவரகொண்டா, பூனம் பாண்டே ஆகியோர் நடித்திருந்த இப்படம் தமிழகத்திலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கடந்தாண்டு, இப்படத்தை வர்மா என்ற பெயரில், தமிழில் மறுவாக்கம் செய்யவுள்ளதாக 'இ4 எண்டெயிர்மென்ட்' நிறுவனம் அறிவித்தது. அதன்படி, படத்தை பாலா இயக்குவதாகவும், அதில் நடிகர் விக்ரமின் மகன் துருவன் விக்ரம் கதைத்தலைவனாக அறிமுகமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வர்மா படத்தின் முழு பணிகளும் நிறைவடைந்த நிலையில், அதை பார்த்த தயாரிப்புக் குழுவினருக்கு படம் திருப்திகரமாக இல்லை. அதனால் வர்மா படத்தை கைவிடுவதாக அறிவித்தது. இது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை கிளப்பியது. இதுதொடர்பான அறிக்கையில், வர்மா படம் புதியதொரு தலைப்பில் உருவாக்கப்படும். அதில் மீண்டும் துருவன் விக்ரம் கதைத்தலைவனாக நடிப்பார் என தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. அதன்படி, இந்த புதிய படத்திற்கு 'ஆதித்யா வர்மா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை கிரிசாயா என்பவர் இயக்கவுள்ளார். தேசிய விருது பெற்ற ரவி கே. சந்திரன் படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். தவிர, வர்மா பட இசையமைப்பாளரான ராதனே மீண்டும் 'ஆதித்யா வர்மா' படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது தற்போது மேலும் ஒரு புதிய செய்தியாக இந்தப் படத்தில் நடிகை ப்ரியா ஆனந்த் இணைக்கப்பட்டுள்ளார். வர்மா படத்தில் ரைசா கதாபாத்திரத்திற்கு பதில் ப்ரியா ஆனந்த் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,069.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.