Show all

கறுப்பு பெண்ணாகவும், வழக்கமான வெள்ளைப் பெண்ணாகவும் இரு தோற்றங்களில் நடிக்கிறார் நயன்தாரா! அடுத்து வரும் திகில்படத்தில்

24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கதைத்தலைவிக்கு முதன்மைத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வரும் நயன்தாரா அடுத்து திகில் படமொன்றில் நடிக்கிறார். இதில் இரட்டை வேடம் ஏற்கிறார். ஒரு கதாபாத்திரத்தில் கவர்ச்சியான தோற்றத்திலும் மற்றொரு பாத்திரத்தில் கறுப்பாக ஒப்பனை செய்து கொண்டும் நடிக்க உள்ளார். 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தை இயக்கிய சர்ஜுன் இப்படத்தை இயக்குகிறார்.
 
இதுபற்றி இயக்குனர் கூறியது: நயன்தாரா இதில்  இரட்டை வேடம் ஏற்கிறார். ஒரு கதாபாத்திரம் வழக்கமான தோற்றத்திலும், மற்றொரு கதாபாத்திரத்தில் மிடுக்கை குறைத்துக் கொண்டு மாறுபட்ட தோற்றத்திலும் நடிக்கிறார். இதுவரை இதுபோன்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றியதில்லை.

அயராவதம் என்ற ஒரு மாய தோற்ற யானையின் பின்னணியிலிருந்து உருவாகியிருக்கும் கதை. அந்த யானைதான் யானைகளின் ராஜாவாக கருதப்படுகிறது. இது நயன்தாராவின் கதாபாத்திரத்தின் பெயர் கிடையாது. ஆனால் அந்த யானையின் பலம் இவருக்கு உள்ளது போன்ற கதாபாத்திரம் என்றார் இயக்குனர் சர்ஜுன்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,936.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.