தனக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறும் என்று நடிகை பிரியா மணி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் மும்பையைச் சேர்ந்த முஸ்ஃதபா ராஜைக் காதலிக்கிறேன். ஒரு நட்சத்திர கிரிக்கெட் போட்டியின்போது சந்தித்தேன். முதலில் நண்பர்களாக இருந்தோம். பிறகு நான் தான் முதலில் காதலைத் தெரிவித்தேன். சில மாதங்கள் கழித்து அவருக்கு என் காதல் புரிந்தது. இருவர் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திருமணத்துக்காக இதுவரை நாள் எதுவும் குறிக்கவில்லை. ஆனால் 2016 ல் திருமணம் செய்துகொள்வோம். அத்திருமணம் ஆடம்பரமாக இல்லாமல் மிகவும் எளிமையான முறையில் நடக்கும். திருமணத்துக்குப் பிறகு நான் நடிப்பேனா மாட்டேனா என்பது திரையுலகின் கையில்தான் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு நான் நடிப்பதைத் திரையுலகம் ஏற்றுக்கொண்டுவிட்டால் நான் ஏன் நடிக்காமல் இருப்பேன்? என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.