Show all

மணி ரத்னத்தின் புதிய படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நானி.

மணி ரத்னத்தின் புதிய படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நானி ஒப்பந்தமாகியுள்ளதாகத் தெரிகிறது.

ஓ காதல் கண்மணிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் போன்றோர் நடிப்பதாக முதலில் சொல்லப்பட்டது.

ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு டிசம்பர் முதல் ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் வந்தன.

ஆனால் துல்கர் 2 மலையாளப் படங்களில் பிஸியாக உள்ளார். டிசம்பருக்குள் அந்தப் படங்களின் படப்பிடிப்பு முடிவடைய வாய்ப்பில்லை என்பதால் அவருக்குப் பதிலாக வேறு நடிகரைத் தேர்வு செய்துள்ளார் மணி ரத்னம்.

‘கடந்த வாரம் தெலுங்கு நடிகர் நானி மணி ரத்னத்தைச் சந்தித்தார். அப்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். துல்கருக்குப் பதிலாக நானி நடிக்கக்கூடும்’ என்று படக்குழுவினர் தகவல் தெரிவிக்கிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.