Show all

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு பீதி.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கழிப்பறை அருகே ஒரு மர்மப் பொருள் இருந்ததை சிலர் பார்த்தனர். அந்தப் பொருளில் இருந்து பீப் சத்தம் கேட்டுக் கொண்டிருந்ததால் அச்சம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

இது குறித்து தகவல் கிடைத்து விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயின் உதவியுடன், அப்பொருளை ஆய்வு செய்ததில், அது வெடிகுண்டு இல்லை என்றும், பீதியை ஏற்படுத்த வேண்டும் என்றே, ஒரு ஜாமெண்டரி பாக்ஸ் போன்ற பெட்டியை வௌ;ளைத் துணியில் சுத்தி, அதில் இரண்டு அலாரம் இணைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, வளாகத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.