Show all

பரபரக்கும் இணையம்! மதுமிதா தெரிவித்த ஆண்ஆதிக்கம், மெய்பிக்கப்பட்டதா?

காவிரி தண்ணீர் குறித்த மதுமிதா முழக்கம் தொடர்பாக செரினிக்கும், மதுமிதாவிற்கும் இடையே தான் முதலில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டாலும், மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது பையன்கள் அணி எனப்படும் கவீன், சாண்டி, தர்ஷன், முகேன் ஆகியோரால் தானாம். அதில் லாஸ்லியாவும்

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸில் மதுமிதா வெளியேறியது சேரன், கஸ்தூரி உள்பட பலருக்கும் மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது. மதுமிதா வெளியேறியது மட்டுமல்லாமல் கையை அறுத்துகொண்டு தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார்.

காவிரி தண்ணீர் குறித்த மதுமிதா முழக்கம் தொடர்பாக மதுமிதாவிற்கும் செரினிக்கும் இடையே தான் முதலில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டாலும், மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது பையன்கள் அணி எனப்படும் கவீன், சாண்டி, தர்ஷன், முகேன், லொஸ்லியா ஆகியோரால் தானாம்.

குறிப்பாக கவீன் இதுதான் வாய்ப்பு என்று மதுமிதாவிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். அவர் தான் செரினுக்கு ஆதரவாக நின்று தமிழச்சி என்று சொல்லி கொள்கின்ற நீயே தமிழ்நாட்டிற்கு உயிரை கொடு என கூறியதோடு சில கெட்ட வார்த்தைகளையும் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மதுமிதா அருகில் இருந்த கத்தியால் தனது கையை அறுத்துகொண்டுள்ளார். இதை பார்த்த கவீன் எதுவும் தெரியாதது போல் நகர்ந்து சென்றுள்ளார் என்று இணையம் பரபரக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,249.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.