Show all

குஜராத் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தை தொழிலாளர்கள்.

குஜராத் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தை தொழிலாளர்கள் பல்வேறு துறைகளில் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக நகர் சார்ந்த பிரயாஷ் மற்றும் மஜூர் அதிகார் மஞ்ச் என்ற இரு என்.ஜி.ஓ. எடுத்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பருத்தி விதைகள் தயாரிப்பில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் 55 சதவீதம் பேர் குஜராத்தில் வேலைப்பார்க்கின்றனர். இது ஒரு லட்சத்து 10 ஆயிரம் குழந்தை தொழிலாளர்களாகும். இந்த தொழிலாளர்கள் அனைவரும் 14 வயதுக்குட்பட்டவர்களாவர்.

இந்தியா முழுதிலும் உள்ள பருத்திவிதை உற்பத்தி பிரிவில் சுமார் 25 சதவீதம் அளவிற்கு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், ஆந்திரா தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இந்த துறையில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் 56.7 சதவீத குழந்தைகள் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்டவர்களாகவும், 34.3 சதவீதத்தினர் பள்ளிக்கு செல்பவர்களாகவும், சீசன் காலகட்டங்களில் தொழிலாளர்களாக பணி புரிவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.