Show all

கல்யாண வீடா, கடுப்பேத்தும் வீடா! சன் தொலைக்காட்சியில் திருமுருகன் இயக்கும் தொடர்

07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சன் தொலைக்காட்சியின் கல்யாண வீடு தொடரில்: இங்க கோபியை விரும்புகிற பொண்ணு சூர்யாவோட அப்பாவுக்கு நெஞ்சுவலி. பாண்டிச்சேரியில் கோபி திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்த ஸ்வேதா அண்ணனுக்கு நெஞ்சுவலி. 

சூர்யாவின் அருகில் இருந்த கோபி, பாண்டிச்சேரிக்கு ஸ்வேதா அண்ணனான தன் நண்பனை பார்க்க போயிடறார். இங்கு சூர்யா அப்பாவுக்கு, இருதய அறுவைசிகிச்சையும், அங்கு ஸ்வேதா அண்ணனுக்கு இருதய அறுவைசிகிச்சையும் நடக்குது. 

ஸ்வேதாவின் அண்ணன் என்னடான்னா கோபியும், சூர்யாவும் காதலிக்கறது தெரிந்தும், தனது தங்கை ஸ்வேதாவை கோபி திருமணம் செய்துக்கணும்னு சத்தியம் செய்து வாங்கிட்டு, அறுவைசிகிச்சை அரங்கத்திற்குப் போறார், போனவர் உயிர் பிழைத்தும் வருகிறார். 

இங்கு சூர்யாவின் அப்பா, ரோஜா இனி தனக்கு மகள் இல்லன்னு சொல்லிட்டு, எனக்கு ஒண்ணு ஆகிப்போச்சுன்னா சூர்யாவைப் பார்த்துக்க யாருமில்லை.. அதனால ராஜா மாப்பிள்ளை நீங்கதான் சூர்யாவை திருமணம் செய்துக்கணும்னு சத்தியம் வாங்கிக்கறார். 

சூர்யாவோ கோபியை காதலிக்கறார். இங்கிருந்து நண்பனைப் பார்க்க பாண்டிச்சேரி போன கோபி, சத்தியத்துக்கு ஆளாவதா, இல்லை காதலுக்கு ஆளாவதான்னு குழம்பி இருப்பதாகக் காட்டி நம்மை சூடேற்றுகிறார். 

கல்யாணவீடு தொடர் தொடங்கியதிலிருந்து எழுத்து போடும் போது கோபியோடு சூர்யா ஸ்வேதா ரெண்டு பேரையுந்தான் காட்றாங்க. எப்படா ஒரு ஆளை வெட்டுவாங்கன்னு பார்த்தா இயக்குநர் திருமுருகன் நம்மை விடுவதாயில்லை. 

கோபி சூர்யாவைத்தான் கட்டிப்பார் என்று மனைவிகளும், இல்லையில்லை ஸ்வேதாவைத்தான் கட்டுவார் என்று கணவன்மார்களும் பந்தயம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் திருமுருகன் யாரைத் திருப்தி படுத்தப் போகிறாரோ தெரியவில்லை ஆனால் நாடகம் பார்க்கும் இரசிகர்களை கடுப்பேத்திக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் உண்மை. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,098.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.