தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ ஆகியவற்றை கட்டுப்படுத்தும்
நடுவண் அரசின் நிறுவனமான பிரசார் பாரதியில் நடிகை கஜோல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ ஆகியவை ; நடுவண் அரசின் பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டின்
கீழ் இயங்கும் தகவல் தொடர்பு நிறுவனங்கள் ஆகும். பிரசார் பாரதியின் தலைவராக சூர்ய பிரகாஷ்
உள்ளார். இதன் பகுதி நேர உறுப்பினர்களாக 6 பேர் செயல்படலாம். இதில் இரண்டு உறுப்பினர்
பதவிகள் காலியாக உள்ளன. தற்போது காலியாக உள்ள ஒரு இடத்தில் பாலிவுட் நடிகை கஜோல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு காலியிடத்தில் ஆன் லைன் மீடியாவைச் சேர்ந்த ஷசிசேகர் வேம்பட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்
துறை செயலாளர் சுனில் அரோரா மற்றும் இந்திய
பத்திரிக்கையாளர் கவுன்சிலை சேர்ந்த ஓய்வுபெற்ற
நீதிபதி சி.கே.பிரசாத் ஆகியோரை கொண்ட கமிட்டி பிரசார் பாரதி உறுப்பினர்களாக கஜோல் மற்றும்
வேம்பட்டியை தேர்வு செய்துள்ளது. இதை தொடர்ந்து வருகிற 24ம் தேதி நடைபெறும் பிரசார்
பாரதி கூட்டத்தில் கஜோல் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள்
எடுக்கப்பட உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.