Show all

இந்தியாவில் ஷோரூம்களைத் தொடங்கி நேரடி சில்லரை வணிகத்தில் ஈடுபட பிளிப்கார்ட் முடிவு.

இந்தியாவில் ஷோரூம்களைத் தொடங்கி நேரடி சில்லரை வணிகத்தில் ஈடுபட முடிவுசெய்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.

முக்கிய பெருநகரங்களில் புதிய ஷோரூம்களை திறக்க உள்ள ‘பிளிப்கார்ட்’ நிறுவனம் அங்கு முதல்கட்டமாக செல்போன்களைக் காட்சிக்கு வைக்க உள்ளது. அவற்றை வாங்க விரும்புபவர்கள், தங்களுக்குத் தேவையான செல்போன்களை நேரில் தொட்டுப்பார்த்து, அவற்றின் செயல்திறன், வேகம் உள்ளிட்ட சிறப்பம்சங்களை ஆய்வுசெய்து, திருப்தியடைந்த பின்னர் தங்களது ஆர்டர்களை ‘பிளிப்கார்ட் ஆப்ஸ்’ வழியாக முன்பதிவு செய்து, அதே ஷோரூம்களிலோ, அல்லது, வழக்கம்போல் கூரியர் மூலமாகவோ டெலிவரி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.