Show all

தம்படமா, எடுத்துக்கோங்கப்பா! இரண்டாவது செல்பேசியை உடைத்த பிறகு சிவக்குமாரிடம் ஏற்பட்ட மாற்றம்

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிகராக 30 ஆண்டுகளுக்கு மேல் கலக்கி கொண்டிருந்தவர் சிவக்குமார்.

இப்போது அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி பிரபல கதைத்தலைவர்களாக அசத்திக் கொண்டிருப்பதால், நடிப்பதில் இருந்து ஒதுங்கிவிட்டார். சிறந்த ஓவியரான சிவக்குமார், ஆன்மீகத்திலும், யோகாவிலும் ஈடுபாடு கொண்டவர்.  மற்ற நடிகர்களுக்கு நடுவில் எந்த சர்ச்சையில் சிக்காமல் சிறந்த பக்குவமான மனிதர் என பெயர் எடுத்தவர்.

இவர் அண்மை காலங்களில் தம்படம் எடுக்க வந்தவர்களின் செல்பேசிகளைத் தட்டிவிட்டதால் விமர்சனத்துக்கு உள்ளாகி வந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் தம்படம் எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்பேசியைத் தட்டிவிட்டது மிகுதியாக பகிரப்பட்டது. அதன்பின் அதே போன்ற ஒரு நிகழ்வு கடந்த கிழமை நடந்தேறியது.

இதனால் தம்படத்தை வெறுக்கும் சிவக்குமார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலும் அதிகமாக இருந்தன.  தற்போது இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக ரசிகர் ஒருவருடன் தம்படத்தைத் தாண்டி காணொளியே எடுத்து கொண்டுள்ளார் சிவக்குமார்.  

இது தொடர்பாக சூர்யா ரசிகர்கள் வெளியிட்டுள்ள காணொளியில், தட்டி விடும் போது திட்டுன யாரும் இப்ப பாராட்டுகிறார்களா? போதும் ஐயா என்று சொல்ற அளவு தம்படத்திற்கு நிற்கிறாரு மனுசன் எனக் கூறியுள்ளனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,065.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.