Show all

சந்தேகமாக உள்ளது. வெட்டுக்களுடன் தான் விசாரணை படம் வெளிவரும்: வெற்றிமாறன்.

தனுஷின், ‘வுண்டர்பார் ஃபிலிம்’ நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின், ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘விசாரணை’. கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய ‘லாக் அப்’ என்ற நாவலின் தழுவலாக இது உருவாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஆனந்தி, சரவணா சுப்பையா, கிஷோர், முருகதாஸ், முத்துகுமார், சந்திரன், அஜய் கோஷல் ஆகியோர் நடித்துள்ளளார்கள். இந்தப் படம் வெனீஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் பெருமைமிகு விருதை வென்றது.

இந்தப் படம் இப்போது மும்பை படவிழாவில் திரையிடப்பட்டுள்ளது. படம் பார்த்த பலரும் வெற்றிமாறனை மிகவும் பாராட்டியுள்ளார்கள். இன்னும் சில நாள்களுக்கு பாதிப்பு இருக்கும் என்றெல்லாம் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறும்போது, இன்று திரையிடப்பட்டதில் 70 சதவிகிதம் படமாக வெளிவந்தாலே நான் சந்தோஷப்படுவேன். ஆனால் எனக்குச் சந்தேகமாக உள்ளது. வெட்டுக்களுடன் தான் படம் வெளிவரும் என்றார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.