சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதாக குற்றஞ்சாட்டி பிரபலமானார் காவல்துறை அதிகாரி ரூபா. தற்போது இவர் திரைத் துறையில் கால் பதித்து மேலும் பிரபலமாகிறார். 28,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதாக குற்றஞ்சாட்டி பிரபலமானார் காவல்துறை அதிகாரி ரூபா. தற்போது திரைத்துறையில் நுழைந்துள்ளார். பரபரப்பு கிளப்ப அன்று; பாட்டுப் பாட. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இவர் பாடுவதை பார்த்து ஒரு கன்னட படக் குழுவினர் இவரை தங்களது படத்தில் பாட அழைத்துள்ளனர். அதன்பேரில் படத்துக்காக ஒரு பாடலை அண்மையில் ரூபா பாடியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,243.
எப்படியோ திரைத்துறைக்கு வந்தாயிற்று; அப்புறம் எதற்கு நான் பாடியது காதலன் காதலிக்கான பாடல் அல்ல என்று நெளிய வேண்டிக் கிடக்கிறது என்கின்றனர் பார்வையாளர்கள்; ஆம் அவர் நான் பாடியது காதலன் காதலிக்கான பாடல் அல்ல என்று நெளிந்திருக்கிறார் போல.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.