Show all

வெள்ளிக் கிழமை வெளியாகும் பேரன்பு! மம்மூட்டியின் பேரன்பைப் பாராட்டும் தயாரிப்பாளர் தேனப்பன்

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'பேரன்பு'. இந்தப் படம் வருகிற வெள்ளிக் கிழமையன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்த நடிகர் நிவின் பாலி, 'பேரன்பு திரைப்படம் உறைய வைக்கும் பேரழகு என்று பாராட்டியுள்ளார். அத்தனையும் இந்த படத்தில் உள்ளது. மனித உணர்வுகளை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கின்றனர். பேரன்பு எங்கள் மனதை கொள்ளையடித்து விட்டது. மம்மூட்டியின் உச்சக்கட்ட நடிப்பைக் காண பேரன்பு படத்தை தவறாமல் பாருங்கள் என முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், மம்மூட்டி மீது எங்களுக்கெல்லாம் ஈர்ப்பு ஏற்பட அவரது அசாத்தியமான நடிப்புதான் காரணம். அவர் மகளாக நடித்திருக்கும் சாதனா மிக அருமையாக நடித்திருக்கிறார். அஞ்சலி அமீரின் நடிப்பும் பாராட்டுதலுக்குரியது, பேரன்பு திரைப்படம் நமக்கெல்லாம் பெருமை சேர்க்கக் கூடிய திரைப்படம். இப்படி ஒரு திரைப்படத்தை எங்களுக்கு அளித்த இயக்குனர் ராம் அவர்களுக்கு நன்றி என்று பதிவு செய்திருக்கிறார்.

அண்மையில் பேரன்பு படம் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் தேனப்பன், பேரன்பு படத்தின் மம்முட்டி சம்பளம் பெறாமல் நடித்ததாக கூறினார். இதற்கு அதே சந்திப்பில் பதிலளித்த மம்முட்டி எல்லாவற்றையும் பணத்திற்காகவே செய்ய முடியாது என தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,047.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.