Show all

பொங்கலுக்கு நான்கு படங்கள்

பொங்கல் திருவிழாவையொட்டி திரையரங்குகளில் 5 காட்சிகள் நடத்த அரசு அனுமதித்துள்ளது. தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வரும் 18, 19, 20, 21 ஆகிய நாட்களில் அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது 5வது காட்சி நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் பொங்கல் திருவிழா விடுமுறை நாட்களான 15, 16. 17 ஆகிய நாட்களில் ஏற்கனவே உள்ள அரசு உத்தரவுப்படி அன்றைய தேதிகளிலும் அதிகப்படியாக ஒரு காட்சி (5வது காட்சி), காலை 9 மணிக்கு நடத்திக்கொள்ளலாம்.

இதனைத் தமிழ் திரை அரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளனர். பொங்கலையொட்டி

உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்ஸன் நடித்துள்ள ‘கெத்து’, விஷால், கேத்ரின் தெரசா நடித்த ‘கதகளி’,

சசிகுமார், வரலட்சுமி நடித்த ‘தாரை தப்பட்டை’, சிவகார்த்திகேயன், கீர்த்தி நடித்துள்ள ‘ரஜினி முருகன்

ஆகிய 4 படங்கள் வெளியாகி உள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.