Show all

தனி ஒருவன் படத்தின் தெலுங்கு உரிமம் ஐந்தரை கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

தனி ஒருவன் படத்தின் தெலுங்கு உரிமம் ஐந்தரை கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான படம், தனி ஒருவன்.

தமிழில் சூப்பர் ஹிட் ஆன இந்தப் படத்தின் தெலுங்கு உரிமத்துக்குப் பலத்த போட்டி இருந்தது. இறுதியில் டி.வி.வி. தனயா இந்தப் படத்தை தெலுங்கில் தயாரிக்க வாங்கியுள்ளார். இதற்காக இவர் ரூ. 5.5 கோடி கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

தெலுங்கு தனி ஒருவனில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க உள்ளார். படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்கும். தமிழில் படத்தை இயக்கிய மோகன் ராஜா, தெலுங்கிலும் இயக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

சமீபத்தில் வெளியான தனி ஒருவன், இதுவரை ரூ. 70 கோடி வசூலித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.