Show all

இரட்டுற மொழிதல் அணியில்- இரஜினியும், நயன்தாராவும்! காட்டுவது பெப்பே; முறையே அரசியலுக்கும், திருமணத்திற்கும்.

தமிழ் இலக்கியங்களில் உள்ள பல பாடல்களில் இரட்டுறமொழிதல் அணி என்னும், (செய்யுளில் சொல்ல வரும் செய்தியை அழகுபடுத்தும்) இலக்கண வகை, பயின்று வந்துள்ளதைக் காணமுடியும். அந்த வகையாக இரட்டுறமொழிதல் அணியில் நாம் இரஜினியையும், நயன்தாராவையும் ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறோம்.

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ் இலக்கியங்களில் உள்ள பல பாடல்களில் இரட்டுறமொழிதல் அணி என்னும், (செய்யுளில் சொல்ல வரும் செய்தியை அழகுபடுத்தும்) இலக்கண வகை, பயின்று வந்துள்ளதைக் காணமுடியும். அந்த வகையாக இரட்டுறமொழிதல் அணியில் அமைந்த, பிற்கால இலக்கிய வெண்பா ஒன்று இங்கே காட்டப்படுகிறது. இப்படித்தான் நாம் இரஜினியையும், நயன்தாராவையும் ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறோம்.
பல்கருவி யாக்கலால்; மின்சார விச்சுளதால்;
தொல்புவி எங்குமே தோன்றுதலால்; -எல்லார்க்கும்
நற்பயன் ஆகுதலால்; நானிலத்தே நீர்மேகம்
நற்கணினி நேர்காண் நயந்து!
இப்பாடல் மழைமேகத்திற்கும், கணினிக்கும் உள்ள பொதுத்தன்மைகளைக் குறிப்பிட்டு ஆகையால் இவையிரண்டும் ஒன்றே என்று வரையப்பட்டுள்ளது காண்க.

தமிழ் திரையுலகில் முதலிடத்தில் இருப்பவர்கள் என்று இரஜினியையும் சொல்லலாம், நயன்தாராவையும் சொல்லலாம். இருவரும் திரையுலகில் அந்த அளவிற்கு சாதித்தே வந்திருக்கிறார்கள். ஆனால் இருவரும் இருவேறு வகைகளுக்கு பெப்பே காட்டுவது ஊராறிந்த செய்தி. ஆம் இரஜினி அவர்கள் தொடர்ந்து அரசியலுக்கு பெப்பே காட்டி வருகிறார். நயன்தாராவோ திருமணத்திற்கு தொடர்ந்து பெப்பே காட்டி வருகிறார்.

நயன்தாராவின் காதல் மன்னனாக தற்போது உலா வந்து கொண்டிருந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். நயன்தாரா தனித் திறமையால் நடித்து வரும் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளது என்பது ஒருபுறம் திரைத்துறைக்கு பெருமையாக இருக்கிறது.

ஆனால், தனது காதலில் தற்போது மூன்றாவது முறையாக தோல்வி அடைந்துள்ளார் என்று திரைத்துறை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அது என்னவென்றால் சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கோவில் கோவிலாக சென்று வேண்டுதல்களை நிறைவேற்றினர்கள்.

கடந்த ஆண்டு இறுதியில் இவர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளிவந்து இரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. கிறிஸ்மஸ் முடிந்தபின் வெளிநாடு சென்றுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாக்கு வாதத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் திருமணம் பற்றி கட்டாயப்படுத்தியதாகவும், ஆனால் தான் முதன்மையான நடிகையாக இருப்பதை இழந்து விடுவோம் என்ற பயத்தில்  திருமணமே வேண்டாம் என்று கூறியது விக்னேஷ் சிவனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னுடன் சேர்ந்து ஊர் சுற்றி உன்னுடைய உண்மையான திறமையை கவனம் செலுத்தாமல் வாய்ப்புகளை இழந்து விடாதே என்று அறிவுரையும் நயன்தாரா கூறியுள்ளார் . இதனால் கோபமடைந்த விக்னேஷ் சிவன் பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு உடனே கிளம்பி விட்டாராம். 
இன்னும் அரசியலுக்கு வந்துவிடாத இரஜினி- மூன்றாவது முறையாக காதல் தோல்வி அடைந்துள்ள நயன்தாரா இந்த இருவரும்  இதுபோன்ற முடிவுகள் எடுப்பதில் பெருமை கொள்வதா? அல்லது கவலைப் படுவதா என்று இவர்களின் இரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,388.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.