Show all

ஏஜிஎஸ் நிறுவனத்துக்குத் தமிழ்த் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.

ஜெயம்ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான படம்-தனி ஒருவன்.

இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இப்போது அப்படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்குத் தமிழ்த் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.

படம் வெளியான சமயத்தில் தொலைக்காட்சி, நாளிதழ், எஃப்.எம் என சகல ஊடகங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டது.

ஆனால், சில தொலைக்காட்சி, நாளிதழ்களில் மட்டும் விளம்பரம் செய்யவேண்டும் என்றொரு நடைமுறையைத் தயாரிப்பாளர் சங்கம் கொண்டுவந்துள்ள நிலையில் அதனை ஏஜிஎஸ் நிறுவனம் மீறியுள்ளதாகத் தெரிகிறது.  

இதற்காக ஏஜிஎஸ் நிறுவனத்துக்குத் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அதன்படி ஏஜிஎஸ் நிறுவனம் இனி படம் எதுவும் தயாரிக்கக்கூடாது. மேலும் தயாரிப்பாளர் சங்கம், ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு தராது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் செய்துள்ளார்.

தனி ஒருவன் படத்தை அதிக அளவில் விளம்பரப்படுத்தியதற்காக ஏ.ஜி.எஸ் நிறுவனம் படம் தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

அதிர்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.