Show all

வீடுகளில் சிட்டுக்குருவிகள் வளர்ப்பு அதிகம்! இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 படத்தின் மூலமான கருத்துப்பரப்புதலுக்கு வெற்றி

09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 படத்தைத் தொடர்ந்து சென்னையில் சிட்டுக்குருவிகளின் வளர்ப்பு அதிகரித்துள்ளது.

தொழில்நுட்பத்தால், பறவைகள் இனம் தொடர்ந்து அழிந்து வருவதை மையப்படுத்தி, பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 படம் வெளியானது. இப்படத்தில் பறவைஅரசன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் வடக்கத்திய நடிகர் அக்ஷய் குமார் பறவைகள் இனம் அழியக்கூடாது என்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடித்திருந்தார். இந்த நிலையில், தற்போது சென்னையில் சிட்டுக்குருவிகள் வளர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று ஆராய்ச்சி தகவல் தெரிவிக்கின்றது. 

இது குறித்து சென்னை இயற்பியலாளர் சமூகத்தின் சார்பில் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை 4 மாதங்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில், சென்னையின் வளர்ச்சியடைந்த சில பகுதிகளில் வீடுகளில் சிட்டுக்குருவிகளின் வளர்ப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,011.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.