காங்கிரஸ் கட்சியின் தலைமை அனுமதித்தால் தமிழகத்தில்
எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடத் தயார் என மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளரும்,
நடிகையுமான நக்மா தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த முகப்பேரில், திருவள்ளூர் தெற்கு
மாவட்ட மகளிர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் நக்மா சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,காங்கிரஸ் -திமுக
ஏற்கனவே வெற்றி கூட்டணி என்றும், அதை மீண்டும் வரும் சட்டமன்றத் தேர்தலில் நிருபிப்போம்
எனவும் கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைமை அனுமதித்தால்
தமிழகத்தில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடுவேன் எனவும் நக்மா தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.