திருமணத்திற்கு பின் மீண்டும் திரைக்கு வந்த ஜோதிகா, இன்னும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவில்லை. இருப்பினும்; சூர்யாவின் தயாரிப்பில் நடித்த படம் விரைவில் வெளியாகிறது. 11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: காக்க காக்க, பூவெல்லாம் கேட்டுப்பார், சில்லுன்னு ஒரு காதல், பேரழகன், மாயாவி, உயிரிலே கலந்தது போன்ற பல படங்கள் திருமணத்திற்கு முன் சூர்யா-ஜோதிகா இணைந்து நடித்து நல்ல வெற்றியை பெற்றன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,132.
ஆனால் திருமணத்திற்கு பின் மீண்டும் திரைக்கு வந்த ஜோதிகா, இன்னும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவில்லை. இருப்பினும் அவர் சூர்யாவின் தயாரிப்பில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் வெறுமனே 35 நாட்களில் முடிக்கப் பட்ட 'ஜாக்பாட்' என்ற படம், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா முதன்மை வேடத்தில் நடித்து படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது.
ஜோதிகாவுடன் முதன்மை வேடத்தில் ரேவதி நடிக்கும் இந்த படத்தில் மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனந்தகுமார் ஒளிப்பதிவில் விசால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள இந்த படம் இரண்டொரு மாதங்களில் திரைக்கு வருகிறது
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.