Show all

சமூக வலைதளங்களில் சோ ராமசாமி இறந்துவிட்டதாக வதந்தி.

பத்திரிகையாளர் சோ ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சோ ராமசாமி இறந்துவிட்டதாக வதந்திகள் பரவின. இப்படித் தகவலை வெளியிட்டவர்களில் நடிகை குஷ்புவும் ஒருவர்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சோ ராமசாமிக்கு இரங்கல் செய்தி தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் சோ ராமசாமி நலமாக இருப்பதாக ரீ- டுவீட் செய்தனர்.

இதற்காக அவர் தற்போது டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், சோ ராமசாமி அவர்கள் இறந்துவிட்டதாக ஒரு பதிவை போட்டிருந்தேன். அதை நான் உறுதிப்படுத்தாமல் செய்துவிட்டேன்.

அது பொய்யான தகவலாக இருக்கும்பட்சத்தில், என் தவறுக்காக நான் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்கிறேன். அவர் நீண்டகாலம் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.