Show all

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்தக் கிழமை சேரன் வெளியேறுவார்! தெரிவிக்கிறது கருத்துக் கணிப்பு முடிவுகள்.

நேற்று வரை முன்னணியில் இருந்த சேரன் தற்போது பின்தங்கி செரீன் முந்தி வருவதால், பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்தக் கிழமை சேரன் வெளியேறுவார் என்று தெரிவிக்கிறது கருத்துக் கணிப்பு முடிவுகள்.

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சட்டெனக் கூடுகிறது செரீன் வாக்குகள். ஆம் வனிதாவுடனான சண்டையால் செரீனுக்கு வாக்குகள் அதிகரித்து வருகிறது. அதனால் சேரன் குறைந்த வாக்குகளோடு இந்தக் கிழமை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்தக் கிழமை ஐந்து பேர் வெளியேற்றப் பட்டியலில் உள்ளனர். கவின், லாஸ்லியா, முகென், செரீன் மற்றும் சேரன் தான் அந்த ஐந்து பேர். இவர்களில் யார் வீட்டை விட்டு வெளியேறினாலுமே, நிகழ்ச்சியின் போக்கு சற்று மாறும் என்பது உண்மை. 

அதனால் இந்த வார வெளியேற்றம் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று வரை பதிவான வாக்குகளின் படி செரீன் தான் மிகக்குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்தில் இருந்தார். அவருக்கு மேலே சேரன் இருந்தார். கவின், லாஸ்லியா மற்றும் முகென் ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று ஏறக்குறைய சமமான இடத்தில் உள்ளனர். 

பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது மீண்டும் வந்துள்ள சாக்ஷி, செரீனிடம் சென்று இந்த முறை நீ தான் பிக்பாஸ் தலைப்பை வென்றிட வேண்டும் எனக் கூறினார். அதற்கு அவர் எப்படி எனக் கேட்டபோது, ‘நான் சொல்றேன்’ என்றார். 

வெளியில் இருந்து பார்த்தபோது, செரீன் குறைந்த வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் இருப்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருக்கையில் அவரது வாக்குகளைக் கூட்ட, உணர்ச்சிகர நாடகத்தை வனிதாவுடன் சேர்ந்து அவர் நடத்தி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,266.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.