Show all

சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் ஷாருக்கான் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி

சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் ஷாருக்கான் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

சென்னையில் சென்ற வாரம் பெய்த கனமழையால் நகரம் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதைத் தொடர்ந்து பலரும் நிவாரண உதவி அளித்து வருகிறார்கள்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனது அடுத்தப் படமான தில்வாலே படக்குழு சார்பாக ரூபாய் ஒரு கோடியை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.