Show all

கெஜ்ரிவால் நிவாரணங்கள் தீர்வாகுமா! ஆட்சியைத் தீர்த்து வைக்குமா

டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கெஜ்ரிவால் மீது ‘ஷூ’ வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் விதத்தில் கடந்த ஜனவரி மாதம் 15 நாட்கள் கார் போக்குவரத்தில் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது.

அதன்படி வாரத்தில் திங்கள், புதன், வௌ;ளி ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவு எண்களில் முடியும் கார்களையும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் இரட்டைப்படை பதிவு எண்களில் முடியும் கார்களையும் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் அனைத்து கார்களையும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதே போன்று இயற்கை வாயுவில் (சி.என்.ஜி.) இயங்கும் கார்கள் சாலையில் அனைத்து நாட்களும் ஓட அனுமதி உண்டு. அதற்கு அரசு தருகிற ஸ்டிக்கர் காரில் கண்டிப்பாக ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

 

     அந்தத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மாநில அரசின் தலைமைச்செயலகத்தில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது ஒருவர் திடீரென எழுந்தார்.

‘அரவிந்த்ஜி ஒரு நிமிடம் தயவுசெய்து நான் சொல்வதை கேளுங்கள். சி.என்.ஜி. ஸ்டிக்கர் ஊழல் தொடர்பாக நான் ஒரு ரகசிய நடவடிக்கை (ஸ்டிங் ஆபரேஷன்)  நடத்தினேன். அதில் ஒரு சி.என்.ஜி. ஸ்டிக்கர் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவது அம்பலமானது. நீங்கள் ஏன் இதை செய்கிறீர்கள்? இதற்கு எதிராக நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’

என்று கேட்டார்.

 

அத்துடன் அவர் கெஜ்ரிவால் மீது ஒரு சி.டி.யையும் (ஸ்டிங் ஆபரேஷன் காட்சியை கொண்டது), ‘ஷூ’வையும் வீசினார். எனினும் அவை கெஜ்ரிவால் மீது விழாமல் பக்கத்தில் போய் விழுந்தன.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

     ஷூ வீசியவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் வேத பிரகாஷ் என்றும், கெஜ்ரிவாலின் ‘ஆம் ஆத்மி’ கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ‘ஆம் ஆத்மி சேனா’வை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த கெஜ்ரிவால்,

     ‘‘ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் கார் ஓட்டுவதில் கட்டுப்பாடு விதிக்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த எண்ணி உள்ளோம். சீருடையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்கிற வாகனங்களுக்கு இந்தத் திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்’’

என்று அறிவித்தார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.