Show all

அழகி அர்ச்சனா ரவிக்கு இணையாக கதைத்தலைவனாக பிக்பாஸ் சாரிக்! படம் உக்ரம்

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்து ஒளிர்ந்து வருகின்றனர். ஹாரிஸ் கல்யாண், ஆரவ், மகத், ஐஸ்வர்யா  தத்தா, யாசிகா, ஜூலி என இதில் பங்கேற்ற அத்தனை பிரபலங்களும் தங்களுக்கான எதிர்காலத்தை அமைத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் சாரிக். இவர் பிரபல நடிகர்களான உமா மற்றும் ரியாஸ்கான் மின்மினி இணையரின் மகன். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி எதிர்ப்பாராத நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் அவர் தற்போது கதைத்தலைவனாக நடிக்கவுள்ள படத்தின் பெயர் 'உக்ரம்' என்றும் இந்த படத்தை 'அட்டு' படத்தை இயக்கிய ரத்தின்லிங்கா  இயக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சாரிக் கதைத்தலைவனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு கதைத்தலைவியாக உலக அழகி பட்டம் பெற்ற  அழகி அர்ச்சனா ரவி நடிக்கிறார். பகைவனாக மலேசிய சிவா  அறிமுகமாகிறார்.

புதிர் அதிரடி, பயங்கரம் நிரம்பிய படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. துரை கே.சி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு வெங்கட், இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,994.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.