Show all

ஒரே நேரத்தில் சுமார் 32 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.

நடிகர் விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் இன்று  வெளியாகிறது.

சுமார் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தை டைரக்டர் சிம்பு தேவன் இயக்கி உள்ளார்.

இந்நிலையில்,

நடிகர் விஜய் மற்றும் புலி திரைப்பட தயாரிப்பு குழுவினர் வீடு களில் நேற்று காலை வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டிலும், சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சாலிகிராமத்தில் உள்ள புலி பட டைரக்டர் சிம்புதேவனின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. நாகர் கோவில் அஞ்சு கிராமத்தில் உள்ள புலி பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் வீட்டிலும் சோதனை நடந்தது.

புலி திரைப்படம் தொடர்பாக பல்வேறு கேள்விகளைக் கேட்டு படக்குழுவினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்தில் 25 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மதுரை வருமான வரி துறையினர் இன்று காலை 5 மணியளவில் சினிமா பைனான்சியர் அன்பு செழியன் வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மதுரை தெற்கு மாசி  வீதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் வீட்டின் உள் பக்கமாக பூட்டிக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். யாரையும் உள்ளே அனுமதிக்க வில்லை.

அதேபோல கீரைத்துரை முத்துப்பிள்ளை தெருவில் உள்ள அவரது மற்றொரு வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.  இந்தச் சோதனையில் சில முக்கிய ஆவணங்களை கைப் பற்றியுள்ளதாக தெரிகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக திகழும் நயன்தாராவின் கொச்சியில் உள்ள வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நயன்தாரா அவ்வப்போது காதல் விவகாரங்களில் சிக்கி வந்துள்ளார். இருப்பினும் அவரது திரை உலக வாழ்க்கை யில் எந்தவித சரிவும் ஏற்பட வில்லை.

தொடர்ந்து பல் வேறு வெற்றிப்படங்களில் நடித்து வரும் நயன்தாரா பல கோடிகளைச் சம்பளமாக வாங்குகிறார். இதைத் தொடர்ந்தே இவரது வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான சமந்தாவின் வீடுகளிலும் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. சென்னை மற்றும் ஐதரா பாத்தில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடந்தது.

சென்னை போட் கிளப், குரோம்பேட்டையில் உள்ள சமந்தா வீடுகளில் ஒரே சமயத்தில் சோதனை நடந்தது.  நயன்தாராவைப் போலவே சமந்தாவும் பல கோடிகளைச் சம்பளமாக வாங்கும் நடிகை ஆவார். இதன் காரணமாகவே அவரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களிலும் இன்று காலை ஒரே நேரத்தில் சுமார் 32 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இன்று காலை முன்னணி நடிகர்,நடிகைகள் வீடுகளில் நடந்த இந்தச் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.