04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும், நடிகை சாயிசாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது இதையடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆர்யா-சாயிசாவின் திருமண நிகழ்ச்சி இசுலாமிய முறைப்படி நடந்தது. அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதைத்தலைவனாக அறிமுகமானவர் ஆர்யா. கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும், நடிகை சாயிசாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த காதலர் நாளன்று கீச்சுப் பக்கத்தில் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்தனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மின்மினி உணவகம் ஒன்றில் ஆர்யா-சாயிசா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுக்கு கதைத்தலைவியாக நடித்த சாயிசா தற்போது காப்பான் படத்திலும் ஆர்யாவுக்கு கதைத்தலைவியாக நடித்து வருகின்றார். காதலித்து திருமணம் செய்துகொண்ட இருவரும் இனி தொடர்ந்து திரைப்படத்தில் இணைந்து நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறுகிறார் சாயிசா இதையடுத்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி படத்தில், மீண்டும் ஆர்யாவுக்கு கதைத்தலைவியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் சாயிசா. இதுகுறித்து சக்தி சவுந்தர்ராஜனிடம் கேட்டபோது, ஆம் அப்படி ஒரு திட்டம் இருக்கிறது. தயாரிப்பு தரப்பில் தெரிவித்தேன். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உறுதியான பிறகு அறிவிப்பு வெளியாகும் என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,095.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.