Show all

பெண்கள் சுயமுன்னேற்றத்தை கையில் எடுத்திருக்கும் அமலாபால்! பாராட்டுகள் குவிந்து வருகின்றன

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், நடிப்பதோடு மட்டுமில்லாமல் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். 

அண்மையில் கேரள வெள்ளத்தின் போது நேரடியாக சென்று களத்தில் இறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்டவர் அமலாபால்.  அவர், அடுத்து சொந்தமாக தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

ஊட்டச்சத்து தொடர்பான பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமான இந்த நிறுவனத்தில் பெண்களுக்கு அதிக முதன்மைத்துவம் தரும் வகையில் அவர்களை அதிக அளவில் பணிகளில் ஈடுபடுத்த உள்ளார். அவர் பெண்கள் சுயமுன்னேற்றத்தை கையில் எடுத்திருப்பதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,934.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.