Show all

ஒப்பனையை விரும்பாத நடிகை! ஒப்பனைப் பொருட்கள் விளம்பரங்களில் மட்டும் நடிக்கவே மாட்டாராம். அவர்தாம் சாய்பல்லவி

நான் எப்போதும் ஒப்பனை செய்து கொள்வதற்கான பொருட்கள் விளம்பரங்களில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று நடிகை சாய் பல்லவி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒப்பனை மட்டும் உங்களை அழகாக மாற்றிவிடாது என்று இளைஞர், இளைஞியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள நடிகை சாய் பல்லவி, அனைவரும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
தமிழில் கரு படத்தைத் தொடர்ந்து சாய் பல்லவி நடித்த மாரி 2 படம் அதிரடி வெற்றியைக் கொண்டாடியுள்ளது.
இந்நிலையில் சாய் பல்லவி அளித்துள்ள பேட்டியில், 'நான் எப்போதும் ஒப்பனை செய்து கொள்வதற்கான பொருட்கள் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன். நீங்கள் யார் என்பதில் உறுதியாக இருங்கள். ஒப்பனை மட்டும் உங்களை அழகாக மாற்றிவிடாது.
ஒப்பனை செய்து கொண்ட நிலையில், நான் வேறு ஒருவர் போல தெரிகிறேன் என கூறுகிறார்கள். அதனாலேயே நான் படங்களில் ஒப்பனை செய்து கொள்வதில்லை. இயக்குனர்களும் அதை தாம் விரும்புகின்றனர்' என்று தெரிவித்துள்ளார் சாய்பல்லவி.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,122.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.