Show all

கிடைத்ததோ மரணதண்டனை! ரூ8160 இலஞ்சம் வாங்கிய வாகன ஆய்வாளர்

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள், நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 75 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத் துறையினர், அதிகாரிகளிடம் லஞ்சப் புகார் தொடர்பாக விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகமே பரபரப்பாக காணப்பட்ட நிலையில், இதை பார்த்து கொண்டிருந்த வாகன ஆய்வாளர் பாபுவுக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. 

ஆனால் அவர் நடிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர், சோதனையைத் தொடர்ந்தனர். கொஞ்ச நேரத்தில் சமாளிக்க முடியாமல் பாபு மயங்கி கீழே விழுந்ததார். அதன் பிறகே  அவரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அனுமதித்தனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மரணமடைந்த பாபுவின் கையில் எட்டாயிரத்து 160 ரூபாய் இருந்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியுள்ளனர்.

இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வாகன ஆய்வாளர் பாபுவின் உடல்நலக்குறைவு நிலைமையைப் புரிந்து கொண்டு உடனடியாகச் செயல்பட்டிருந்தால் ஓர் உயிர் காப்பாற்றப் பட்டிருக்கும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,960.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.