Show all

நடிகை சமந்தா, ஜோதிகா தனது முன்னுதாரணமாம்! நடிகை சாயிசா திரைப்படங்களில் தான் தொடர்ந்து நடிப்பதற்கு

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொடர்ந்து திரையுலகில் நீடிப்பது குறித்து முடிவெடுப்பதற்கான முழு உரிமையையும் தனக்கு ஆர்யா அளித்திருக்கிறார் என்று சாயிசா கூறியுள்ளார்.

திருமணத்துக்குப் பிறகும் சாயிசா தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கப் போவதாகவும் இந்த விசயத்தில் தனக்கு நடிகை சமந்தா மற்றும் ஜோதிகாதான் முன்னுதாரணம் என்று தெரிவித்துள்ளார்.

வனமகன், படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் சாயிசா. இவர் பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி.

கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் என தொடர்ந்து சில படங்களில் நடித்தவருக்கு ஆர்யாவுடன் காதல் மலர்ந்தது. இது குறித்து இவரது குடும்பத்தாருக்கு விவரம் தெரிய வந்ததும், இவர்களது திருமணத்தை உடனே நடத்தி முடித்துள்ளனர்.

ஆர்யாவை கரம் பிடித்ததில் மகிழ்ச்சி. எங்களது ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து நடிப்பது பற்றி முடிவு எடுக்க ஆர்யா எனக்கு முழு உரிமை கொடுத்துவிட்டார். எனவே தொடர்ந்து நடிப்பேன். சமந்தா, ஜோதிகா போன்றோரை இதில் முன்னுதாரணமாக கொண்டுள்ளேன், என்கிறார் சாயிசா.

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் புதிய படத்தில் கதைத்தலைவனாக நடிக்கிறார் ஆர்யா. 'டெடி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ள கரடி கதாபாத்திரத்துக்கு முதன்மைத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சாயிசாவை கதைத்தலைவியாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,096.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.