Show all

நடிகை சாய் பல்லவி தீவிரவாதியாக நடிக்கும், விரத பாவம் 199! தெலுங்கு படம்

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகை சாய் பல்லவி, பிரேமம் என்ற மலையாளப் படம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். அதையடுத்து தமிழில் கரு என்ற படத்தில் நடித்தார். பின்னர் அவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். அதிக வாய்ப்புகள் வந்தாலும் எல்லா படங்களையும் ஒப்புக் கொள்வதில்லை. அதில் தரமான படங்களாக பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் பல பட வாய்ப்புகளை நிராகரிப்பதால் அவர் மீது பல இயக்குனர்கள் கோபத்தில் உள்ளனர்.

தற்போது தனுசுக்கு ஜோடியாக 'மாரி 2' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் தானி ஓட்டுநராக நடித்துள்ளார். 

மேலும் இவர் தெலுங்கில் வேணு உடுகலா இயக்கத்தில் ராணா கதைத்தலைவனாக நடிக்கும் விரத பாவம் 199 என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் ராணா காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். சாய்பல்லவி நக்சலைட்டாக நடிக்க உள்ளார்.

இந்த படம் ஒரு காதல் படமாம். காதல் காட்சிகள் தூக்கலாக இருந்தாலும் அதிரடிக்கும் குறைவே இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரேமம் படத்தை அடுத்து சாய் பல்லவி தெலுங்கு படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,005. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.