Show all

இலக்குதரமுயர்த்தலுக்கான செய்தியாளர்களின் சீண்டல்! திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகை கீர்த்தி சுரேசின் தப்பித்தல்

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தங்கள் சார்ந்த செய்தி நிறுவனம் அல்லது தொலைக்காட்சியின் இலக்குதரமுயர்த்தலுக்காக (டிஆர்பி) செய்தியாளர்கள் சில நேரங்களில் பிரபலங்களிடம் சிக்கலான கேள்வியைக் கேட்பதுண்டு.  

அப்படி சேலம் மாவட்டம் ஆத்தூரில் விழா ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை கீர்த்தி சுரேசிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி. உங்கள் திருமணம் எப்போது என்பது.

விரிவாக பதிலளித்த நடிகை கீர்த்தி சுரேஷ், படிக்கும் போதே நடிகையாக வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு ஏற்படவில்லை . விளம்பரஅழகாளராக பணியாற்றி வந்தேன். அப்போது கடவுளின் அருளால் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து . இப்போது நடிகையாகி விட்டேன். கடினப்பட்டு கடுமையாக உழைத்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். மலையாளத்தில் நான் முதலில் அறிமுகம் ஆகியிருந்தாலும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததால் தான் எனக்கு ஒரு அடையாளம் மற்றும் அங்கீகாரம் கிடைத்தது.

தமிழத்; திரைப்படத்தில்  புதுப்புது இயக்குனர்கள் அறிமுகம் ஆகி பற்பல வேறுபட்ட படங்களை இயக்குகிறார்கள். படங்களை பார்க்க வரும் ரசிகர்களும் நன்கு தெளிவாகவே உள்ளனர்.

என்னால் முடிந்த அளவுக்கு நல்ல கதைப்பாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இதற்காக கடுமையாக உழைக்கிறேன். திருமணம் செய்யும் ஆசை இப்போது இல்லை. இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். நடிகர் விஜய் கூட நடித்துவிட்டேன். அஜித்குமாருடன் நடிக்க வேண்டும் இப்படி நிறைய ஆசைகள் என்று முடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,031.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.