சில நாட்களுக்கு முன்னர், நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரின் வீடுகளில் இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்துச் சோதனையில் பலகோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள நடிகர் விஜய், வருமான வரித்துறையினர், சினிமாத்துறையை சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் வீடுகளில் சோதனை செய்வது வழக்கமானது தான். கடந்த வாரம் என்னுடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனைக்கு நானும் எனது குடும்பத்தினரும் உரிய ஒத்துழைப்பு அளித்தோம். இது தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியில் உண்மையில்லை. நான் சட்டத்தை மதித்த நடப்பவன். சட்டத்துக்கு மரியாதை கொடுப்பவன். நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய தொழில் மற்றும் வருமான சம்பந்தப்பட்ட கணக்குகளை, உரிய நேரத்தில் உரிய வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்து, அதற்குரிய வருமான வரி, தொழில்வரி, சொத்து வரியை செலுத்தியுள்ளேன். நான் எப்போதும் வருமான வரித்துறைக்கு ஒத்துழைப்பு தருவேன் என கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.