27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும், வரும் தை மாதத்தில், இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது. நடிகர் ரஜினியின், இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும், சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்றனர். தன் மகனுடன், சென்னை, போயஸ் தோட்டம் வீட்டில், பெற்றோருடன் சவுந்தர்யா வசித்து வருகிறார். திரைபடத் தயாரிப்பு, இயக்கம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கோவையைச் சேர்ந்த, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடியின் சகோதரரும், பிரபல தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகன். இவரும், ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்றவர். தேவர் சமுதாயத்தை சேர்ந்த விசாகனுக்கும், சவுந்தர்யாவுக்கும், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய, நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு உள்ளது. இருவரின் திருமணம், வரும், தை மாதத்தில் நடைபெறவுள்ளது. விசாகன், வெளிநாட்டில், வணிகமேலாண்மை முதுவர் படிப்பை முடித்து, சென்னையில், மிகப் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,970.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.