Show all

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் கோரிக்கை.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் ஜல்லிகட்டு தொடர்பான புகைப்படக் கண்காட்சியை கமல் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்பது என் விருப்பம். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு. ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை.  ஜல்லிக்கட்டு இந்தியாவில் நடைபெற்றால் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். இதனால் சுற்றுலாத்துறையும் வளர்ச்சியடையும் என்று அவர் தெரிவித்தார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.