Show all

முன்னாள் ராணுவத்தினர் பதக்கங்களைத் தீயிட்டு கொளுத்திய வேளையில்

இந்தியாவை உலகமே திரும்பிப் பார்க்க ராணுவ வீரர்களின் வீர,தீர மற்றும் அர்பணிப்பே காரணம் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அமிர்தசரஸ் அருகே காசா என்ற இடத்தில் உள்ள டோக்ராய் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மோடி அஞ்சலி செலுத்தினார். ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கிய அவர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் பேசிய மோடி முப்படைகளின் வீர தீரம் அர்பணிப்பு ஆகியவையே உலகம் இந்தியாவை திரும்பி பார்க்க காரணம் என்றார். நாட்டுக்கு சேவை புரிந்து போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களை நன்றியுடன் நினைவு கூர்வதாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் பதவியேற்ற பிறகு 2-வது ஆண்டாக வீரர்களுடன் மோடி தீபாவளியைக் கொண்டாடியுள்ளார். கடந்த ஆண்டு சியாச்சில் எல்லை பகுதியில் ராணுவ வீரர்களுடன் அவர் தீபாவளி கொண்டாடினார்.

ஒரு பதவி, ஒரே ஓய்வூதிய விவகாரத்தில் முன்னாள் ராணுவத்தினர் பதக்கங்களை தீயிட்டு கொளுத்திய வேளையில் பிரதமர் மோடி வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.