Show all

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்

டி.சி.எஸ். நிறுவனம் சார்பில் தரவுகளைச் சேகரிக்கும் பிரிவில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என அந்த நிறுவனத்தின் சென்னைப் பிரிவு செயலாக்கத்தின் தலைவர் ரவி விஸ்வநாதன் தெரிவித்தார்.

உலக முதலீட்டாளர் மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று, தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் முதலீட்டு வாய்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில், ரவி விஸ்வநாதன் வேலைவாய்ப்பு குறித்த கருத்தைத் தெரிவித்தார்.

அதுகுறித்து அவர் பேசுகையில், தகவல் தொழில்நுட்பத்துறையில் தரவுகளைச் சேகரிக்கும் நிபுணர்களின் தேவை அதிகளவில் உள்ளது. தமிழகத்தில் டி.சி.எஸ்., நிறுவனம் சார்பில் ஒரு லட்சம் தரவு நிபுணர்களுக்கு வேலை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.