Show all

பிணமாக நடித்த சேட்டு என்கிற செல்வராஜ் மரணமடைந்தார்

ஆகஸ்ட் 10ம் தேதி தமிழகத்தில் திமுகவினர் நடத்திய மதுவிலக்குப் போராட்டத்தின் போது சேலம், ஆத்தூரில் பிணமாக நடித்த சேட்டு என்கிற செல்வராஜ் மரணமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ஆத்தூரில் திமுக நடத்திய போராட்டத்தின் போது, பிணம் போல ஒருவர் அமரவைக்கப்பட்டு மாலை போட்டு, அவரை சுற்றி பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.

இதில் பிணமாக உட்கார்ந்திருந்த சேட்டு என்கிற செல்வராஜ், மறுநாள் உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 4 நாட்களில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இறந்தது போல நடித்தவர், ஒரு வாரத்துக்குள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.