Show all

கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படத்தில் நடிகை திரிஷா சொந்த குரலில் டப்பிங் பேசினார்

கமல்ஹாசன், திரிஷா ஜோடியாக நடித்துள்ள புதிய படம் ‘தூங்காவனம்’. பிரகாஷ்ராஜ், ஆஷாசரத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் எம்.செல்வா இந்த படத்தை டைரக்டு செய்துள்ளார். திரில்லர் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது.

கமல்ஹாசன் துப்பாக்கியுடன் இளம் பெண்ணை அழுத்தி பிடித்து இருப்பது போன்று இந்த படத்துக்கான போஸ்டர்கள் வெளிவந்தன. அந்த படங்களை வைத்து போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறாரா?, அல்லது வில்லனாக வருகிறாரா? என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிவடைந்துள்ளது. தற்போது குரல் பதிவு, இசைகோர்ப்பு பணிகள் நடக்கின்றன. தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படத்தில், திரிஷா சொந்த குரலில் வசனம் பேசுகிறார். ஏற்கனவே கமல்ஹாசனுடன் ‘மன்மதன் அம்பு’ படத்தில் நடித்தபோது, அதிலும் சொந்த குரலில் பேசினார். இப்போது இந்த படத்திலும் கமல்ஹாசன் சொந்த குரலில் பேசவைத்துள்ளார். ஸ்டியோவில் குரல் பதிவு நடந்தபோது திரிஷாவின் அருகிலேயே கமல்ஹாசன் அமர்ந்து எப்படி பேசவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். இதற்காக திரிஷா ‘டுவிட்டரில்’ மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.