Show all

ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுக்கான பெயர் பட்டியல் அறிவிப்பு

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த வகையில் இந்த வருடத்திற்கான வீரர்களை தேர்ந்தெடுக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முன்னாள் நீதிபதி வி.கே. பாலி தலைமையில் ஒரு குழுவை நியமித்தது.

இந்த குழு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு சானியா மிர்சாவின் பெயரை பரிந்துரைத்தது.

மேலும், அர்ஜூனா விருதுக்கு தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா ஆகியோர் உள்பட 17 பேரின் பெயர்களையும் பரிந்துரை செய்திருந்தது.

இந்த பரிந்துரையை ஆராய்ந்த மத்திய விளையாட்டுத்துறை மந்திரி சர்பானந்தா சோனோவால் அதற்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டார். இதையடுத்து மேற்குறிப்பிட்ட 18 பேருக்கும் மத்திய அரசின் விளையாட்டு விருதுகள் வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை இன்று அறிவித்துள்ளது.

தேர்வு செய்யப்பட்ட 18 பேருக்கும், வரும் 29-ந்தேதி தேசிய விளையாட்டுத்தினத்தன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.