Show all

'பத்து எண்ணுறதுக்குள்ள” படத்தின் 'டீசர்” வெளியீட்டு நிகழ்ச்சி

'பத்து எண்ணுறதுக்குள்ள” படத்தின் 'டீசர்” வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் விக்ரம், சமந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குனர் விஜய் மில்டன் படம் பற்றி கூறியதாவது:-

தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும் டிரைவராக விக்ரம் நடித்துள்ளார். ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பிப்பது கூட பத்து எண்ணுறதுக்குள்ள ஒரு டிரைவர் எடுக்கும் முடிவைப் பொறுத்தது தான். அந்த நேரத்தில் அவர் எடுக்கும் முடிவு தான் முக்கியம். விக்ரம் ஜோடியாக நடிக்கும் சமந்தா சாதாரண பெண்ணாக வருகிறார். கதை தமிழ்நாட்டில் இருந்து நோபாளம் வரை பயணம் செய்யும்போது நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. விக்ரமுடன் சமந்தாவும் பயணம் செய்கிறார்.

ஒரு கட்டத்தில் அவர்கள் பயணச் செலவுக்கு பணம் தேவைப்படுகிறது. இதற்காக ஒரு அரசியல்வாதியிடம் விக்ரம் பணப்பையை திருடுகிறார். அதில் நிறைய பணம் இருக்கிறது. உடன் வரும் சமந்தா 'தேவைப்படும் பணம் போக மீதியை எடுத்த இடத்தில் கொண்டு வைக்கும்படி சொல்கிறார்” பணப்பையை வைக்கும்போது விக்ரம் சிக்கிக் கொள்கிறார்.

ரகசியமாக கேமராக்கள் வைத்து இந்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போது இதை பார்த்த ஒருவர் விக்ரம் உண்மையாகவே திருடன் என்று நினைத்து அவரைப் பிடித்துக் கொண்டார். அவரிடம் உண்மையை சொல்லி சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

இந்த படத்துக்காக சமந்தா குதிரை சவாரி பழகினார். ஆரம்பத்தில் சிரமப்பட்டார். சில நாட்களிலேயே திறமையாக கற்றுக் கொண்டார். ஆயிரக்கணக்கான ஓட்டங்கள் கூடும் இடமும் இந்த படத்தில் அழகாக இடம் பெற்றிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சமந்தா பேசும்போது, 'நான் நடிக்கும் போது காட்சி நன்றாக அமைவதற்காக டைரக்டரும், விக்ரமும் என்னை அடித்தார்கள்” என்றார். விக்ரம் பேசும்போது, 'குதிரை பயிற்சியில் அவரை மிரட்டினேன். மற்றபடி அவர் திறமையாக நடித்தார்” என்று புகழ்ந்தார். 'தேவன் மகன்' கமல் போல் பெரிய மீசையுடன் வந்த விக்ரமிடம் அதுபற்றி கேட்டபோது, எந்த பதிலும் சொல்லாமல் சிரித்து சமாளித்தார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.