Show all

டாஸ்மாக் நேரத்தை குறைக்க உயர்நீதி மன்றத்தில் வழக்கு

அரசு மதுபான கடையின் விற்பனை நேரத்தைக் குறைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் கே.பாலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழகத்தில் மட்டும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானங்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. பிற மாநிலங்களை போல மதுவிற்பனை செய்யும் நேரத்தை குறைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானங்களை டாஸ்மாக் நிறுவனம் விற்பனை செய்யவேண்டும் என்று இந்த உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். என்று அதில் கூறியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.