Show all

அசத்தியவர் என்றால் அது டி.ராஜேந்தர் தான்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் நாயகன் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆக இருந்தாலும், அனைவரையும் தனது வழக்கமான எதுகை மோனை பேச்சினால் அசத்தியவர் என்றால் அது டி.ராஜேந்தர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாள் வெளிவராமல் பல பிரச்சனைகளில் சிக்கிய சிம்புவின் 'வாலு' படம், விஜய் தலையிட்டதும் ஒருசில மணி நேரங்களில் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கின்றது. இந்த நன்றிக்கடன் டி.ராஜேந்தருக்கு இருந்தாலும், அவருடைய பேச்சில் ஒரு நிஜமான பாசம் இருந்ததை பார்க்க முடிந்தது. அவருடைய ஒவ்வொரு வார்த்தையும், அவரது அடிமனதில் இருந்து எழுந்து வந்ததாகவே பார்வையாளர்கள் கருதினர். மொத்தத்தில் தனது நெகிழ்வான பேச்சினால் இந்த விழாவின் நாயகனாகவே டி.ராஜேந்தர் மாறிவிட்டார் என்பதுதான் உண்மை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.