Show all

ஆடிப்பெருக்கு தினக் கொண்டாட்டத்துக்கு மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் இன்று நிறுத்தம்

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் ஆடிப்பெருக்கு தினக் கொண்டாட்டத்துக்கு என்று கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் இன்று நிறுத்தம் செய்யப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்ட மக்களின் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டத்துக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.இன்று முதல் அந்த நீர் நிறுத்தம் செய்யப்பட்டதாகத் தெரிய வருகிறது.இப்போது அணையின் நீர்மட்டம் 133 டிஎம்சியாக உள்ளது.அணைக்கு நீரின் வரத்து 3 ஆயிரம் கன அடியாக உள்ளது.

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீர்ப்பாசனத்துக்கு என்று வருகிற 9ம் திகதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.