Show all

தொடரும் 2ஜி அலைகற்றை வழக்கு

2 ஜி அலைகற்றை வழக்கு- நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்றுவருகிறது. கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய சிபிஐ அவகாசம் கோரியிருந்தது. இந்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்படடுள்ள ஆ.ராசா, ராஜிவ் அகர்வால் உள்ளிட்டோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

ஆவணங்களை படித்துப் பார்க்க அவகாசம் வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தனியார் தொலைக்காட்சிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின் இறுதிவாதமும் நேற்று தொடங்கியது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், வாதங்களை முன்வைத்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.