Show all

கருணாநிதிக்கு சமூக ஆர்வலர் சசிபெருமாள் ஆதரவு

மது விலக்கை அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ள கருணாநிதிக்கு, சமூக ஆர்வலரான சசி பெருமாள் ஆதரவு தெரிவித்துள்ளார்.திமுக ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.

இதனையடுத்து இன்று கருணாநிதியை சந்தித்த சமூக ஆர்வலரான சசிபெருமாள், மதுவிலக்கிற்கு ஆதரவாக கருணாநிதி எடுத்திருக்கும் முடிவிற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் இதே நிலைபாட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.