Show all

நடிகர் ரஜினிகாந்த் மீது குற்றவியல் வழக்கு

நடிகர் ரஜினிகாந்த் மீது குற்றவியல் வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இயக்குனரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரிராஜா நிதிநிறுவனரிடம் கடன் வாங்கும்போது, இந்தக் கடனை தாம் அடைப்பதாகவும், அப்படி முடியாவிட்டால் ரஜினிகாந்த் கொடுப்பார் என்றும் கூறி பேப்பரில் கை எழுத்திட்டதாக கூறப்படுகிறது.

இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், நேரில் ஆஜரான ரஜினிகாந்த், தாம் கஸ்தூரி ராஜாவின் கடனை அடைப்பதாகக் கூறவில்லை என்றும் இதுக் குறித்து தமக்கு ஒன்றும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.இன்றைய விசாரணையில், ரஜினிகாந்த் முன்னுக்குப் பின் முரணாக தொடர்பில்லாமல் பதில் கூறியுள்ளார் என்றும் எனவே, ரஜினிகாந்த் மீது குற்றவியல் வழக்குத் தொடர கோரிக்கை வைத்து நிதிநிறுவனர் தரப்பில் மனுத் தொடரப்பட்டதாக தெரிய வருகிறது.

இதையடுத்து ரஜினிகாந்த் விளக்கம் அளிக்க 2 வார கால அவகாசம் கொடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.